Friday, July 8, 2011

கழிவுப்பொருள் அகற்றப்படாத நிலை

யாழ்ப்பாணத்திலுள்ள railway station road அருகே குப்பைகள் கழிவுப்பொருட்கள் கொட்டப்படுகின்றன. இவை பறவைகளாலும் விலங்குகளாலும் வீதிகளில் சிந்தப்படுவதனால் மக்கள் போக்குவரத்துச்செய்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மேலும் அக்கழிவுப்பொருட்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அதன் அருகில் குடியிருக்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் அப்பகுதிவாழ் மக்கள் கருத்துத்தெரிவிக்கின்றனர்.



Tuesday, July 5, 2011

கழிவு நீர் அகற்றப்படாத நிலை

யாழ்ப்பாணத்தின் ஸ்டரான்லிறோட்டில் உள்ள கான்களில் கழிவுநீர்கள் அகற்றப்படாத நிலையில் துர்நாற்றம் வீசப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
     மேலும் இதனால் வியாபாரிகள் தாமும் பாதிக்கப்படுவதாகவும் அதன் துர்நாற்றத்தினால் வியாபாரம் செய்யயமுடியாத நிலையும் ஏற்படுகின்றது எனவும் தெரிக்கின்றனர். இதனால் நுளம்புகள் பெருக்கமடைந்து நோய் வருவதற்கான அறிகுறிகளும், சுவாசநோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளது.