பைசிக்கிள் தீஃவ்ப்; எனது
கண்ணோட்டம்………
இத்திரைப்படமானது ஒரு கலைப்படைப்பான வகையுடைய இத்தாலிய மொழியில் வெளிவந்த திரைப்படமாகும். இது மிகப்பிரபல்யமான திரைப்பட இயக்குனரான வித்தோரியோ டிசில்வா என்பவரினால் இயக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகம் . இது தயாரிப்பாளரரன கியூசெப்பெ அமெத என்பவரினால் தயாரிக்கப்பட்டு 1948ம் ஆண்டு நவம்பர்மாதம் 24ம் திகதி வெளிவந்தது இத்திரைப்படத்தின்மூலம் வறுமை என்பது தெளிவாக எடுத்துக்காட்டப்படுகின்றது மற்றும் ஒரு படம் எப்படி இருக்கவேண்டுமோ அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளமை சிறப்பானதாக அமைகின்றது
திரைப்படத்தின் கதையின் சுருக்கத்தை நோக்கும் போது அந்தோனியாவின் குடும்பம் மனைவி, பிள்ளைகளை கொண்ட வறுமையான குடும்பமாகும். வேலையில்லாத அந்தோனியர் ரிச்சி வேலை தேடிக் கொண்டிருக்கிறார் பல பேர் வேலையை காத்து கொண்டிருக்கும் வேளையில் ஒரு அதிகாரி அந்தோனியாவின் பெயரை கூப்பிட்டு போஸ்டர் ஒட்டும் வேலை இருக்கிறது அதற்கு சைக்கிள் தேவை என்கிறார். 2ஆம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் வாழ்ந்த அந்தோனியோ வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டத்தின் படி மிதி வண்டி வைத்திருத்தல் அவசியமாகும். இதனால் அந்தோனியாவின் மனைவி தனக்கு சீதனமாக வந்த பொருட்களை எல்லாம் விற்று கணவருக்கு மிதி வண்டி ஒன்றை வேண்டி கொடுத்தார்.
பின் அவர் அந்த மிதிவண்டியில் வேலைக்கு செல்கிறான் அப்போதுதான் அவனுடைய மிதிவண்டி தொலைந்து போகின்றது. ஆவன் தனது வேலையையும் விட்டு மிதிவண்டியை தேடும் முறற்சியில் ஈடுபடுகின்றான் கடைசியில் அவனுடைய சைக்கிள் திருடியவனை கண்டும் அவனைப்பிடிக்கமுடியவில்லை என எண்ணிமிகவும் கவலைப்படுகிறான். தனதுசைக்கிள் கிடைக்க வில்லையே என நினைத்து வேறு சைக்கிளை திருடச்செல்லும்போது அங்கு பொலிசாரால் பிடிக்கப்பட்டு அடிவாங்குகிறான்
இவ்வாறாக கடைசியில் சைக்கிளும் இல்லாது வேலையும் இல்லாது வீடு திரும்புகின்றான் இந்தவகையில் நோக்கும் போது ஒரு மனிதனின் மனிதநேயமற்ற தன்மையும் ஒருவனுடைய மனக் குமுறலும் வறுமை என்பது என்ன என்பதும் வெளிப்பட்டு நிற்பதை காணமுடிகின்றது;

No comments:
Post a Comment